கல்லூரி  வகுப்பறையில்  மயங்கி விழுந்த மாணவி  மரணம்.. சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


கல்லூரி  வகுப்பறையில்  மயங்கி விழுந்த மாணவி  மரணம்.. சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


தலைவாசல்  அருகே  தனியார்  கல்லூரி  வகுப்பறையில்  மயங்கி விழுந்த மாணவி  சிகிச்சை  பலனின்றி  உயிரிழப்பு.

சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அருகே  கீரிப்பட்டி  பகுதியை  சேர்ந்த கூலித் தொழிலாளியான  பழனிசாமி -  லட்சுமி  தம்பதியின் 19 வயது மகள்  தலைவாசல்  அருகே  உள்ள தனியார் கல்லூரியில்  பி.எஸ்.சி முதலாம்  ஆண்டு  படித்து  வந்தார்.  இந்த நிலையில்  வழக்கம்  போல் கல்லூரிக்கு  சென்ற  மாணவி  வகுப்பறையில் திடீரென  மயங்கி  விழுந்துள்ளார், இதையறிந்த  கல்லூரி  நிர்வாகம்  மாணவியை  மீட்டு  தலைவாசலில்  உள்ள  தனியார்  மருத்துவமனையில் முதலுதவி  அளிக்கப்பட்டு  பின்னர்  மேல்சிசிச்சைக்காக  ஆத்தூர்  அரசு தலைமை  மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர்.

Also Read: மயங்கி விழுந்த பள்ளி மாணவிக்கு பேய் ஓட்டிய சம்பவம்.. கல்வராயன்மலையில் பரபரப்பு

அங்கு மாணவியை பரிசோதித்த  மருத்துவர்கள்  மாணவி  ஏற்கனவே  இறந்து  விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்  குறித்து  தகவறிந்த  தலைவாசல்  போலீசார் மாணவியின் உடலை மீட்டு, பிரேத  பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை  செய்து  கொண்டாரா?   அல்லது  கல்லூரி ஆசிரியர்கள்  ஏதாவது  கண்டித்தார்களா? இல்லை  வேறு  ஏதாவது  காரணமா என்பது  குறித்து  பல்வேறு  கோணங்களில்  விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.கல்லூரிக்கு  சென்ற  மாணவி  வகுப்பறையில்  மயங்கி  விழுந்து சிகிச்சை  பலனின்றி  உயிரிழந்த  இச்சம்பவம்  சக  மாணவிகளிடையே  பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

 

Comments

Popular posts from this blog

Poulet au Vin Jaune de Jura Creamy Braised Chicken with Jura Wine and Morels #Wine

2 Budget