தங்கத்தின் விலை சற்று உயர்வு! நகைப்பிரியர்கள் ஏமாற்றம்; சோகத்தில் இல்லதரசிகள்!


தங்கத்தின் விலை சற்று உயர்வு! நகைப்பிரியர்கள் ஏமாற்றம்; சோகத்தில் இல்லதரசிகள்!


ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலை உண்டு. ஆனால் தங்கத்திற்கு மட்டும் எப்பொழுதும் விலை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தங்கத்தின் விலை மணிக்கு ஒரு முறை மாறிக் கொண்டே வரும்.

 

இந்த நிலையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளதாக அறியப்படுகிறது. நாம் தினந்தோறும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தை அறிந்து கொண்டு வருகிறோம்.

அதன்படி இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 473 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த 48 ரூபாய் விலை அதிகரிப்பின் காரணமாக சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 35 ஆயிரத்து 784 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு 35 ஆயிரத்து 888 ஆக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதோடு மட்டுமல்லாமல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 65 புள்ளி 30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நேற்றைய தினம் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூபாய் 65.35 விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Topics:gold, gold price, silver, தங்கத்தின் விலை

Click to comment

Comments

Popular posts from this blog