காரில் கடத்திய 250 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்



திருவொற்றியூர்: செங்குன்றம் ஆலமரம் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில் 5 அடி நீளம் கொண்ட  250 கிலோ எடையுள்ள 5 செம்மரக்கடைகள் இருந்தது. இதுதொடர்பாக கார் டிரைவர் சிவசங்கரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் திருச்சி அருண்குமார்(29), செங்குன்றம் சரவணன் (எ) அர்னால்ட் சரவணன்(34), வியாசர்பாடி மோகன்(61), அண்ணனூர் ஜமால் (எ) அசேன் மொய்தீன்(34), கும்மிடிப்பூண்டி ரமேஷ்(46), இப்ராஹீம் ஷா(44), சிவசங்கர்(24), இப்ராஹிம்(56), பி.வி.காலனி சங்கர்(39) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:

செம்மரக்கட்டை
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog