கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: மேலும் 4 பேர் கைது..118080054


கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: மேலும் 4 பேர் கைது..


கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.   மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில்,  மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 17 ஆம் தேதி   ஏராளமான  இளைஞர்களும், அப்பகுதி மக்களும் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் அந்தப் போராட்டம்  கலவரமாக மாறியது.  போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 20க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்.  வகுப்பறைகள், அலுவலக அறைகள் என அனைத்தையும் சூறையாடிய போராட்டக்காரர்கள், நாற்காலிகள் மேசைகளை அடித்து நொறுக்கினர்.  

 

 இதனையடுத்து  கலவரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு  உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, வீடியோ பதிவுகள், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து  இந்த கலவரம் தொடர்பாக 330-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.  இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமூக வளைத்தளங்களில் தவறாக பதிவிட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

Comments

Popular posts from this blog

Poulet au Vin Jaune de Jura Creamy Braised Chicken with Jura Wine and Morels #Wine

2 Budget